Ads Area

சம்மாந்துறை கயர் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழா.

சம்மாந்துறை கயர் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

கயர் பாலர் பாடசாலையின் அதிபர் ஏ.வீ.லைலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன திணைக்களத்தின் பொறியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.அப்துல் றகீம், பாலர் பாடசாலைகளின் மாவட்ட கள உத்தியோகத்தர் எம்.எஸ்.றிஸான், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பிரதேச முக்கியஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கயர் பாலர் பாடசாலை நிர்வாகத்தினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe