Ads Area

பா.உ.மன்சூர் அவர்களினால் ஏழைகளின் நன்மை கருதி சம்மாந்துறையில் வீட்டுத் திட்டம்.

முஹம்மட் றிஸ்விகான்.

வீடு கட்ட முடியாமல் கஸ்டப்படுகின்ற ஏழை மக்களின் நன்மை கருதி அவர்களுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களின் முயற்சியின் பயனாக ஆரம்பித்திருக்கும் வீட்டு திட்டதின் சென்னல் கிராமம் 1, 2 ஆகிய கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் நிகழ்வு  2019/05/16ம் திகதி சென்னல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் அவர்களும், கிராம சேவகர் நிர்வாக உத்தியோகத்தரும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சேர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் அவர்களும் வீடமைப்பு உத்தியோகத்தர்களும் கிராம சேவகர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தி யோகத்தர்களும் சென்னல் கிராமத்தின் ஏராளமான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe