Ads Area

இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் இன்றி புதைக்கப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள்.

சாய்ந்தமருதில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட தீவிரவாதிகள் 10 பேரின் சடலங்களும் இஸ்லாமிய மத தலைவர்களின் அறிவுறுத்தலின்படி, மத அனுஷ்டானங்கள் எதுவுமின்றி பொலிசாரினால் புதைக்கப்பட்டது!

இதேவேளை குறித்த தீவிரவாத கும்பலுடன் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களும் பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுடன் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

சாய்ந்தமருதில் தற்கொலை செய்து கொண்ட தீவிரவாதிகளின் உடலை சாய்ந்தமருது பள்ளிவாசல் பொறுப்பேற்று முஸ்லிம் மையவாடிகளில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட மாட்டாது என சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் அண்மையில் அறிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடமில்லை தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்ததோடு அப்பாவிகளின் உயிரையும் பலியெடுத்தவர்கள் ஒரு போதும் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது.


Pic - Al Mashoora News.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe