காரைதீவு சகா.
கல்முனையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அதற்கு ஆதரவு தெரிவித்து காரைதீவில் இன்று நண்பகல் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக தவிசாளர் கே.ஜெயசிறிலுடன் சபை உறுப்பினர்களான மு.காண்டீபன், த.மோகனதாஸ், இ.மோகன், ஆ.பூபாலரெத்தினம், சி.ஜெயராணி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு அமைப்பாளரும், முன்னாள் உப தவிசாளருமான வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை இவ்வுண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருக்கோவில் பிரதேசத்தில் நாளை முதல் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக பிரதேசசபைத்தவிசாளர் வி.இ.கமலராஜன் தெரிவித்துள்ளார்.