Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு

(எம்.எம்.ஜபீர்)

ஜனாதிபதியின் வழிகாட்டில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு  வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வும், போதைப் பொருள் ஒழிப்பு  வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இதற்கமைவாக சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களுக்கு  போதைப் பொருள் பாவனை  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாடின் பணிப்புரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.அச்சி முஹம்மட் தலைமையில் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஜீ.வீ.எம்.றஸாட் வளவாளராக கலந்து கொண்டு போதைப் பொருள் பாவிப்பதினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடைசெய்வது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், அல்-அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.அப்துல் றகீம், அல்-அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எல்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின்  அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தஸ்லிமா, ஆசிரியர்கள், சமூக நலன் மாணவர் அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe