கொழும்பு மற்றும் மகரகமை பிரதேச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை ஒரு முஸ்லிம் வள்ளல் வழங்கி வந்தார்.
இது கடந்த நான்கு வருடங்களாக இந்த மகத்தான பணி நடைபெற்று வருகிறது.
கிளினிக் மற்றும் வாட்டுக்களில் உள்ள மிஸ்மாரிடம் இதற்கான டோக்கன்கள் இருக்கும். அவர்கள் அங்கு வரும் ஏழை நோயாளர்களுக்கு இதனை பகிர்ந்தளிப்பார்கள்.
எனினும் அண்மைக்காலமாக அரசியல் வாதி ஒருவரினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் இனவாத புரளி காரணமாக மேற்படி இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜனபோஷ நிறுவனம் நிறுத்திக்கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது.