Ads Area

ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வந்த நிறுவனம் இனவாத கருத்துக் காரணமாக இன்றுடன் மூடப்படுகிறது


கொழும்பு மற்றும் மகரகமை பிரதேச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை ஒரு முஸ்லிம் வள்ளல் வழங்கி வந்தார்.

ஒரு நாளைக்கு சுமார் 3000 உணவு பார்சல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இது கடந்த நான்கு வருடங்களாக இந்த மகத்தான பணி நடைபெற்று வருகிறது.

கிளினிக் மற்றும் வாட்டுக்களில் உள்ள மிஸ்மாரிடம் இதற்கான டோக்கன்கள் இருக்கும். அவர்கள் அங்கு வரும் ஏழை நோயாளர்களுக்கு இதனை பகிர்ந்தளிப்பார்கள்.

எனினும் அண்மைக்காலமாக அரசியல் வாதி ஒருவரினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் இனவாத புரளி காரணமாக மேற்படி இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜனபோஷ நிறுவனம் நிறுத்திக்கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் பிரபல் எக்ஸ்போ லங்கா ஹாஜியாருக்கு சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe