Ads Area

ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பிய பா.ஜ.க எம்.பிக்கள்! அல்லாஹ் அக்பர் என சொல்லி எம்.பியாக பதவியேற்ற ஓவைசி.

ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுப்பிய பா.ஜ.க எம்.பிக்கள்! அல்லாஹ் அக்பர் என சொல்லி எம்.பியாக பதவியேற்ற ஓவைசி.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்க வரும்போது, பா.ஜ.க எம்.பிகள் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கடந்த இரண்டு தினங்களாக எம்.பிக்களாக பதவிஏற்றனர் அவர்களுக்கு சபாநாயகர் பதவியேற்புச் செய்து வைத்தார்.

அதன்படி, தெலங்கான, தமிழ்நாடு எம்.பிக்கள் இன்று பதவியேற்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் தொகுதி எம்.பியாக பதவியேற்பதற்கு அசாதுதீன் ஓவைசியின் பெயர் வாசிக்கப்பட்டது. உடனே, பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிரித்த முகத்துடன், தொடர்ந்து கோஷம் எழுப்புங்கள் என்பதுபோல கையை அசைத்துக் கொண்டே வந்த ஓவைசி பதவிப் பிரமாணத்தின் இறுதியில், ’ஜெய் பீம்’, ‘ஜெய் மீம்’ ‘அல்லாஹ் அக்பர்’’ என்று கூறினார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe