Ads Area

சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை.

இஸ்லாம் அடிப்படைவாத்தை தோற்கடிப்பதற்காக மாகசங்கத்தினர் ஒன்றுபட வேண்டும் என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, இந்த நாட்டில் பாரம்பரிய மற்றும் நடுத்தர முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அவர்களுக்கு இந்த வஹாப் வாதம் குறித்து தெரியாது. 

இந்த நாட்டுக்கு ஒரேயொரு மாற்று வழியே உள்ளது, அது சிங்களத் தலைவர் ஒருவரையும் சிங்கள அரசாங்கம் ஒன்றையும் நியமிப்பதாகும்.  சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாவிட்டால் இந்த துறவு வாழ்க்கையில் அர்த்தமில்லை எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார். 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe