Ads Area

எங்கள் நாடு குப்பைத் தொட்டி அல்ல!' - பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பிய கம்போடியா.

துறைமுகத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த குப்பைகளைக் கண்டறிந்த கம்போடிய அதிகாரிகள், அந்தந்த நாடுகளுக்கே அவற்றைத் திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சில நாடுகள் இறக்குமதி செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தற்போது கம்போடியாவும் சேர்ந்திருக்கிறது.

கம்போடியாவின் தென்மேற்குத் துறைமுகமான சிஹானோக்வில்லேவில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் 83 கன்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைக் கண்டுபிடித்து திறந்து பார்த்தபோது, சுங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் என பெயரிடப்பட்டு பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தன.

இவற்றின் மொத்த எடை மட்டும் 1,600 டன். 83 கன்டெய்னர்களில் 70 கன்டெய்னர்கள் அமெரிக்காவையும், 13 கன்டெய்னர்கள் கனடாவையும் சேர்ந்தவை. அவை அனைத்தையும் கண்டறிந்த அதிகாரிகள், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கம்போடியா அரசு, ``இது வெளிநாடுகளின் குப்பைத்தொட்டி அல்ல என்பதை மற்ற நாடுகள் மனதில் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறது.

மேலும் இதுகுறித்து கம்போடியா சுங்க அமைச்சகம் விசாரணையில் இறங்கி வருகிறது. இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மறுசுழற்சிக்காக, சில மேற்கத்திய நாடுகள் தமது நாட்டின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனாவுக்கு அனுப்பின. ஆனால், வௌிநாட்டுக் கழிவுப் பொருள்களுக்கு சீனா கடந்த வருடம் தடை விதித்தது. இதே போன்று, வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 450 டன் கழிவுப்பொருள்களை மலேசியா கடந்த மே மாதம் திருப்பி அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் வளர்ந்த நாடுகள் தங்களது குப்பைகளை எந்த நாடுகளுக்கு அனுப்புவது என்று தெரியாமல் குழம்பி இருக்கின்றன.

பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவரும் ஆசியா http://www.sammanthurai24.com/2019/07/bio-medical-waste-sri-lanka.html
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe