குருணாகல், கல்கமுவயைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் பசிக்கொடுமையினால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த போது காவல் துறையினால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.
கணவர் கைவிட்டுச் சென்றதால் வாழ வழியின்றி, பல நாட்கள் பட்டினியில் வாடிய 38 வயது தாயும் 11 வயது மகளும் தற்கொலை முடிவை நாடியிருக்கின்றனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத காடையர்களின் தாக்குதல் காரணமாக முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பஸ்டா கம்பனியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
அவர்கள் இப்போது தொழிலின்றி என்ன செய்கிறார்கள் என்பதை இனவாதத்தை தூண்டிய எந்த அரசியல்வாதியும், இனவாத அரசியலுக்கு பலியாகிய சாதாரண மக்களும் யோசித்தார்களா தெரியவில்லை. சிங்கள ரத்தம் என்று பேசும் எவரும் பட்டினியால் சாகத் துணிந்த தாயை சிங்கள ரத்தமாக நினைத்து உதவ போவதில்லை.
-மோகனா தர்ஷினி-