Ads Area

இனவாதம் பேசுவோர் பட்டினியால் சாகத் துணிந்த சிங்கள குடும்பத்திற்கு உதவுவார்களா?

குருணாகல், கல்கமுவயைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் பசிக்கொடுமையினால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த போது காவல் துறையினால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

கணவர் கைவிட்டுச் சென்றதால் வாழ வழியின்றி, பல நாட்கள் பட்டினியில் வாடிய 38 வயது தாயும் 11 வயது மகளும் தற்கொலை முடிவை நாடியிருக்கின்றனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத காடையர்களின் தாக்குதல் காரணமாக முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பஸ்டா கம்பனியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

700 மில்லியன் பெறுமதியான அந்தக் கம்பனியை மீண்டும் புனரமைக்க போவதில்லை என அதன் உரிமையாளர் அறிவித்திருந்ததாக தகவல்கள் கசிந்தன. அந்த தொழிற்சாலையில் வேலை செய்த 500 இற்கும் மேற்பட்டவர்கள் சிங்களவர்களே.

அவர்கள் இப்போது தொழிலின்றி என்ன செய்கிறார்கள் என்பதை இனவாதத்தை தூண்டிய எந்த அரசியல்வாதியும், இனவாத அரசியலுக்கு பலியாகிய சாதாரண மக்களும் யோசித்தார்களா தெரியவில்லை. சிங்கள ரத்தம் என்று பேசும் எவரும் பட்டினியால் சாகத் துணிந்த தாயை சிங்கள ரத்தமாக நினைத்து உதவ போவதில்லை.

அரசும் அவர்களுக்கு என்ன செய்யப்போகிறதோ? இவ்வாறான இலட்சக்கணக்கான சிங்கள ரத்தங்கள் இருக்கின்றன. அவர்கள் இனவாத அரசியலை கடந்து உழைக்கும் வர்க்கமாக திரண்டாலன்றி இதற்கு விடிவு ஏற்படப்போவதில்லை. இனவாத அரசியலினால் சாதாரண அப்பாவி மக்கள் வாழ்வு சிதைக்கப்படுவதையிட்டு இனவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறிதும் கவலைப்படுவதில்லை.

-மோகனா தர்ஷினி-
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe