Ads Area

பாலியல் ரீதியாக பகிடிவதையில் ஈடுபட்ட 19 ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் கைது.


ருஹுணு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பத்தொன்பது மாணவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பகிடிவதைக்குள்ளாக்கிய விவகாரத்தில் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாத்தறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை, கைதானவர்களில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரும் ஒருவர்.

மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் சரணடைந்ததை தொடர்ந்து, சித்திரவதைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்ததன் பின்னர் ஒரு மாணவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் மாத்தறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.மற்றைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe