அல்லாஹ்வின் உதவியால் கருஞ்சீரகம் கொரோனாவுக்கு மருத்து தாகியது உண்மை சம்பவம்
இங்கிலாந்தில் லண்டன் நகரில் Abdullah Aid UK எனும் நிறுவனத்தின் CEO ஆக அறியப்படும் ஷகீல் மல்ஜி எனும் சகோதரர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயின் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்.
வழமையான மருத்துவங்கள் அனைத்தையும் முயற்சி செய்த அவருக்கு எதுவுமே கைகொடுக்கவில்லை.
நாளாக நாளாக அவரது நிலைமை மோசமடைந்து, இறுதியில் மூச்சு விடக் கூட முடியாத இறுதிக் கட்டத்துக்கு அவரது நோய் உக்கிரம் அடைய...
உடனே முஃப்தி மென்க் அவருக்கு ஒரு மருத்துவத்தைப் பரிந்துரை செய்தார்.ஏனைய முயற்சிகளை நிறுத்தி விட்டுத் தான் குறிப்பிடும் மருத்துவத்தை மட்டும் ஒரு வார காலத்துக்குச் செய்து வருமாறு முஃப்தி மென்க் அவரிடம் கூறினார். அந்த மருத்துவம் குறித்து ஏற்கனவே தனக்கு ஓரளவு ஆய்வு சார்ந்த அனுபவம் உண்டென்றும், அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து அதைச் செய்து, நிவாரணத்தை அல்லாஹ்விடம் கேட்குமாறும் அவர் கூறினார். முஃப்தி மென்க் பரிந்துரைத்த மருத்துவம் மிகவும் எளிமையானது.
தினமும் மூன்று வேளை அரை தேக்கரண்டி வீதம் கருஞ்சீரக எண்ணெய் ஒரு வாரத்துக்குக் குடித்து வர வேண்டும். அதைக் குடிக்கும் போது இளஞ்சூடான நிலையில் குடிப்பதே சிறந்தது. தனியாக அதை மட்டும் குடிக்கலாம். அல்லது தேனுடன் கலந்தும் குடிக்கலாம். மேலதிக ஊட்டச்சத்துக்காக தினமும் இரு தடவை எலுமிச்சம் பழச் சாறும் குடித்து வர வேண்டும். இவ்வளவு தான் மருத்துவம்.
முஃப்தி மென்க் பரிந்துரைத்த பிரகாரம் அச்சகோதரர் கருஞ்சீரக எண்ணெய் குடிக்க ஆரம்பித்தார். நோயின் உக்கிரம் குறைய ஆரம்பித்தது. ஐந்தே நாட்களில் அல்லாஹ்வின் அருளால் அவர் பூரணமாக நலம் பெற்று விட்டார்.
கடந்த 29ம் திகதி (முந்தாநாள்) முஃப்தி மென்க்கை வாட்சப்பில் தொடர்பு கொண்ட அவர், தனக்கு அல்லாஹ்வின் அருளால் கருஞ்சீரகத்தைக் கொண்டு நிவாரணம் கிடைத்து விட்டது எனும் செய்தியை முஃப்தியிடம் கூறினார்.
கருஞ்சீரகத்தைக் கொண்டு நிவாரணம் தேடுமாறு முஃப்தி மென்க் அவருக்குப் பரிந்துரைத்ததையும், நோய் குணமடைந்த பிறகு அவர் முஃப்தியைத் தொடர்பு கொண்டு விபரம் கூறியதையும் ரெக்கார்ட் செய்யப்பட்ட வாட்சப் ஆடியோ வடிவில் நம்பகமான ஒரு சகோதரரிடமிருந்து நானே என் காதால் கேட்டேன். எத்தி வைக்க வேண்டியது என் கடமை என்று கருதியதால் எத்தி வைத்து விட்டேன்.
- அபூ மலிக்