தமிழகத்தில் இன்று 48 பேர் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன மூதாட்டி 74 வயதானவர். சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள பொழிச்சூரைச் சேர்ந்தவர் ஆவார்.கடந்த மாதம் 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடட்ற சர்க்கரை வியாதி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.