Ads Area

பேஸ்புக்கில் இஸ்லாத்தை அவமதித்து பதிவிட்டவரை வேலையை விட்டு அதிரடியாக நீக்கிய டுபாய் நிறுவனம்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் (டுபாய்) நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை அவமதித்து முகநுாலில் கருத்து தெரிவித்தமைக்காக அவரை வேலையை விட்டு அதிரடியாக  நீக்கியது அவர் பணிபுரிந்த நிறுவனம்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த றாகேஷ் என்பவர் டுபாயில் உள்ள Emrill Services என்ற நிறுவனத்தில் டீம் லீடராக (team leader) பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளமான முகநுாலில் இஸ்லாத்தை கேலி செய்யும் விதத்திலும், தொழுகை போன்றவற்றினை நகைப்புக்கு உள்ளாக்கும் விதத்திலும் வெறுப்பூட்டும்படியான பதிவுகளை பதிவேற்றி வந்துள்ளார். அத்தோடு தற்போது முழு நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விடையத்திலும் தொழுகையையும், முஸ்லிம்களையும் விமர்சித்து பதிவுகளும், கொமண்ட்களும் செய்து வந்துள்ளார். குறிப்பிட்ட ஒரு சமயத்தவரை, மதத்தை இழிவுபடுத்தும் படியான இவரது பதிவுகள், கொமண்ட்கள் இவர் பணிபுரிந்த நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றவுடன் குறித்த நிறுவனம் அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.

சம்மாந்துறை24 இணையத்தள பக்கத்தில் இணைந்து கொள்ள இங்கே லைக் செய்து கொள்ளுங்கள், நாங்கள் பதிவிடும் செய்திகள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கப் பெறும். https://www.facebook.com/Sammanthurai24News/

இது குறித்து அவர் பணிபுரிந்த Emrill Services என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி Stuart Harrisson கூறுகையில், இது போன்ற பிற மதங்களை இழிவுபடுத்தும் வெறுக்கத்தக்க செயல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது இதனால் நாங்கள் அவரை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினோம் தற்போது றாகேஷ் என்பர் டுபாயில்தான் இருக்கின்றாரா என்று தெரியவில்லை, அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார்.

பிற மதத்தினரை, மதத்தை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் கடுமையான தண்டனைகளை வழங்க 2015ம் ஆண்டு சட்டமியற்றியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe