கத்தாரிலுள்ள வீடுகளில் பணிபுரியும் பெண்களை (ஹவுஸ் மெயிட்) ஸ்பான்சர்களின் வீடுகளிலிருந்து தப்பி ஓட (பாய) உதவிய 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கத்தார் உள்துறை அமைச்சகத்தின் வடக்கு பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆபிரிக்கர்களும் மற்றும் ஆசிய நாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் பல்பேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் பணிபுரிந்து வந்த
வீட்டுப் பணிப்பெண்களை அங்கிருந்து ஓடச் செய்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி பின்னர் சட்ட விரோதமாக அவர்களை வேறு இடங்களில் பணிபுரிய உதவி செய்த காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி - கத்தார் தமிழ்