Ads Area

முல்லைத்தீவு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழப்பு.

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த இருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த இரண்டு வயோதிபர்கள் உயிரிழந்த விடயம் பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் யாசகம் பெற்று வந்த மற்றும் வீடுகள் அற்ற நிலையில் நிர்கதியாகியிருந்த 100 ற்கும் மேற்பட்டவர்கள் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இவர்களில் சுமார் 80 வயதுடைய வயோதிபர் ஒருவர் இன்று காலை சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் மற்றுமொரு வயோதிபர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர்களின் இரத்த மாதிரிகளை பெற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Almashoora Breaking News
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe