துபாய் பாலைவனத்தின் நடுவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 மதுபான போத்தல்களை துபாய் காவல் துறையினர் அதிரடியாக கைப்பற்றியுள்ளார்.
அண்மையில் ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது துபாய் காவல்துறையால் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் 1,483 மதுப் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன இதனோடு சம்பந்தப்பட்ட ஏழு பேர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
டுபாய் ஜெபல் காவல் நிலையத்தின் இயக்குனரான அடேல் முகமது அல் சுவெய்தி (Adel Mohamed Al Suweidi) இது தொடர்பாக பேசுகையில்,”
இரண்டாம் பரிசோதனையின் போது மதுப் போத்தல்களை தங்களது காரில் கடத்திச்சென்ற இரண்டு ஆசிய ஆண்களை கைது செய்திருக்கிறது காவல்துறை. இதுகுறித்து காவல் துறைக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.தப்பிக்க எத்தனித்தவர்களை துரத்திச் சென்று கைது செய்து அவர்களிடம் இருந்த 115 மதுப் போத்தல்களைக் கைப்பற்றி இருக்கிறது காவல்துறை.