Ads Area

இர்ஷாட் ஏ.காதர் மன்றத்தினால் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு 30000 மருந்து பைகள் வழங்கி வைப்பு.

தகவல் - அமீர் முஹம்மட்.

சம்மாந்துறை இர்ஷாட் ஏ. காதர் நற்பணி மன்றத்தினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிற்குத் தேவையாகவிருந்த நோயாளர்களுக்கு விநியோகிப்பதற்காக சுமார் 30000 மருந்து பக்கட்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் ஹனீபா அவர்களி்டம் வைத்தியசாலை ஊழியர்கள் முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டன. 

இந் நிகழ்வில் மன்றத் தலைவரும் ஊடகவியலாளருமான இர்ஷாட் ஏ காதர் மற்றும் தவிசாளர் டாக்டர் காலித்,செயலாளர் முஸ்தாக் அலி, பிரதான செயற்பாட்டாளர் அல்ஹாஜ்.எஸ்.எம்.அமீர்,அல்ஹாஜ் இஷட்.ஏ.பஸீர்,சட்டத்தரணி றிப்னாஸ்,நிதிச் செயலாளர் நைஷர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் ஒரு தொகுதி தெம்பிலி இன தென்னங் கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதையும் நட்டும் வைத்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe