Ads Area

வெளிநாட்டில் உள்ளவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் உள்ள இலங்கையர்கள் மீண்டும் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு பேசிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் செயற்பாடு கடந்த மாதம் 14ம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe