Fauzer Mahroof
இலங்கை அரசியலில் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு முன்னும்,பாராளுமன்ற ஜனநாயக அரசியலின் வழியாக, மகிந்தவுக்கு குறைந்தபட்சம் ஒரு ஜனநாயக, கருத்துக்களை மெல்லிய அளவிலாவது பகிரக்கூடிய ஒரு ஜனநாயக முகம் உள்ளது.
இது முன்னெப்போதும் இல்லாத பெரும் அச்சுறுத்தலையும் , சிதைவையும் இலங்கையின் ஒட்டு மொத்த சிவில் சமூகங்களுக்கும் , ஜனநாயக அடிப்படை விழுமியங்களுக்கும் அதன் நிறுவனங்களும் வழங்கும்.
இலங்கையின் சட்டவாக்கத்துறை, நீதித்துறை, ஊடகத்துறைகளின் மீதும், அதன் துணை அமைப்புகளின் மீதும் இராணுவ அணுகுமுறையிலான்ஆதிக்க மேலாதிக்கம், சிங்கள இன, மத தேசிய கருத்தியலின் அடிப்படையுடன் கலந்து இறுக்கமான கலவையாகிறது.
ஆனால், இன்று வெளியாகி உள்ள அரசாங்கத்தின் உத்தியோக அறிவித்தலின் படி, மேலும் ஒரு சிங்கள இராணுவ அதிகாரி தொல்லியல் குழுவில் இணைக்கப்பட்டிருப்பதுடன் , எந்த சிறுபான்மையினருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஜனாதிபதி ஜனாதிபதிதான், பிரதமர் பிரதமர்தான்! கிழக்கில் சூரியன் மட்டுமல்ல, இனி சிங்கள பவுத்த தேசியவாதம் கோதாவின் அதிகாரத்தில் உதிக்கும்!