(சில்மியா யூசுப்)
எதிர் வரும் 05 ம் திகதி நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் உவைஸ் ஹாஜியார் தெரிவித்தார்.
நேற்று 18ம் திகதி கம்பளை பிரதேசத்தில் நடைபெற்ற கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி சார்பில் இலக்கம் 7 இல் போட்டியிடும் அல் ஹாஜ் ALM fபாரிஸ் அவர்களை ஆதரித்து வெற்றியை உறுதி செய்வதற்கான பொதுக்கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின்னர் நாடு ஒரு சிறந்த நிலையில் பயணித்து கொண்டிக்கிறது. இனியும் இவ்வாறே பயணிக்க எமது வாக்குகளை ஏனைய கட்சிகளுக்கு வழங்கி மீண்டும் இனவாதத்தினை ஏற்படுத்தி , பிரச்சினைகளை தூண்டாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சிறுபான்மையினர் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
மேலும் இனியும் நாம் பிரிந்து செல்லாமல் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியானது இம்முறையும் தேர்தலில் வெற்றிபெறும். எனவே சிறுபான்மையினர் மிக கவனமாக சிந்தித்து தங்களது வாக்குகளை வழங்குங்கள் என தெரிவித்தார்.