Ads Area

திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோ துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று (11) தேசிய புலனாய்வு பிரிவினர் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய புலனாய்வு பிரிவினர் திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் ஒரு கடையினை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

இதனை அடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சரம்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe