அன்சார் சம்மாந்துறை
துருக்கியில் அண்மையில் இடம் பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளுக்குல் சிக்கித் தவித்த 4 வயது பெண் குழந்தை ஒன்று 91 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்குல் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் அந்த இடத்தை நோக்கிச் சென்ற மீட்புக் குழுவினர் குழந்தையினை அடையாளம் கண்டதாகவும், அந்தக் குழந்தை தனது பெயர் அய்லா என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிர போராட்டத்தின் பின் குழந்தை தற்போது பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இரு நாட்களுக்கு முன்னர் 3 வயது மற்றும் 14 வயது நிரம்பிய இரு சிறுமிகள் இவ்வாறு கட்டிட இடிபாடுகளுக்குலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் https://news.sky.com