சவுதி அரேபியாவில் மார்ச் 14 முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், (கபாலா) பணி மாறுதல் பயணம் மேற்கொள்ளுதல் (Exit/Re-entry) மற்றும் நாட்டை விட்டு இறுதி வெளியேறுதல் (Final Exit) போன்றவை தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை என்று சவுதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் ஒப்பந்தம் முடிந்தால் ஒரு வெளிநாட்டு தொழிலாளி முதலாளியின் அனுமதியின்றி வேறு வேலைக்கு மாறலாம். தொழிலாளி ஸ்பான்சரின் அனுமதியைப் பெறாமல் எக்ஸிட் re-entry யை அடித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறலாம்.
சவூதி அரேபியாவில் தொழிலாளர் சட்டத்தில் தீவிர மாற்றத்தை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தம் காலாவதியானால், ஒரு தொழிலாளி ஸ்பான்சரின் அனுமதியின்றி வேறு நிறுவனத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. மறு நுழைவு மற்றும் இறுதி வெளியேறும் நடைமுறைகளையும் தொழிலாளி செய்ய முடியும். இந்த சட்டம் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொருந்தும். இந்த சட்டங்கள் அனைத்தும் 2021 மார்ச் 14 முதல் நடைமுறைக்கு வரும்.
இது அனைத்தும் தொழிலாளர்களின் Absher மற்றும் Qiwa போன்ற ஆன்லைன் சேவைகள் மூலம் செய்து கொள்ளலாம். தொழிலாளர் வேலைவாய்ப்பு, மறு நுழைவு மற்றும் இறுதி வெளியேறும் விசாக்களைப் பெற்றவுடன் தொழிலாளர் அமைச்சகம் முதலாளிக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கும். ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் ஸ்பான்சரின் அனுமதி தேவை. ஒப்பந்தங்களை மீறும் தொழிலாளர்கள் அல்லது நிறுவனம் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.
சவுதி அரேபியா நாட்டின் தொழிலாளர் சட்டம் என்பது எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டது முதல் நடைமுறையில் உள்ள மிகவும் பழமையான வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் மீதான அதிகபட்சமாக அதிகாரம் உடையதாக இருந்து வருகிறது.
ஒரு தொழிலாளர் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அதன் இறுதி முடிவு என்பது முதலாளியுடையதாக(Sponsor) இருக்கும். இதை முற்றிலுமாக உடைந்து எறியும் விதத்தில்
சவுதி தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை நவம்பர்-4 வெளியிட்டுள்ள சீர்திருத்தம் 2021 மார்ச் முதல் நடைமுறையில் வருகிறது. இந்த மாதம் இறுதியில் சவுதியில் ஜி-20 மாநாடு நடக்க இருக்கும் நிலையில். உலக நாடுகள் உற்று நோக்கம் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய தொழிலாளர் கொள்கை அடிமைத்தனத்தின் நவீன வடிவம் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சவுதியில் வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி என்ற அளவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.