Ads Area

குவைத்தில் 2 வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்பு.

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்ந்தால் 2 வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்பு :

குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத்தில் 2 வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சரவை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பசில் அல் சபா அவர்கள் நேற்று சில வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தார்.

ஆறு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் பரவுதல் தற்போது உள்ள அளவிலேயே தொடர்ந்தால் இரண்டு வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, கொரோனா வைரஸ் நோய் அதிகம் பரவுகின்ற Governorates பகுதிகளில் முழு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்,

குவைத் நாட்டிற்கு வருகை தரும் வணிக விமான சேவைகள், ஷாப்பிங் காம்ளக்ஸ், வணிக சமூகங்கள், சுகாதார மையங்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை நிறுத்தப்படவேண்டும் என்றும், உணவகங்களுக்குள் சாப்பிடுவதை தடை செய்து, வீட்டு விநியோக சேவை மட்டும் (Home Delivery) அனுமதிக்க வேண்டும் என்ற வழிமுறைகளை அமைச்சரவையின் பரிசீலனைக்கு குவைத் சுகாதாரத்துறை சமர்ப்பித்துள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 8 வரை வணிக மையங்கள் உட்பட, மக்கள் ஒன்றாகச் சேரும் நிறுவனங்களின் வேலை நேரத்தைக் குறைத்தல், உணவகங்களில் ஒரு முன் பதிவு முறையை உருவாக்கி, அவர்களின் வேலை நேரத்தை இரவு 9 மணி வரையிலும்,

சுகாதார கிளப்புகளில் நுழைவதற்கான முன் பதிவு முறையை உருவாக்கவும், சுகாதாரதுறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்கள் மூன்று நாட்கள் மூடப்பட வேண்டும் என்றும், மீண்டும் மீண்டும் நடந்தால், பெரும் அபராதம் விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும், குளிர்கால கூடாரங்களை தடை செய்வது போன்ற வழிமுறைகளை அவசரமாக செயல்படுத்த சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe