சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிரதேசங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல் திரட்டப்பட்டுள்ளது.
இது கடந்த 14 நாட்களுக்குல் பதிவான கொரோனா தொற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கீடு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.