சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து ஜனவரி முதலாம் திகதிக்குள் முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இது குறித்து அறிவித்துள்ளார். பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள்.
ஜனவரி முதலாம் திகதிக்குள் ஆலோசனை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அதிகாரிகள் அனுமதி கொடுத்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் ரணதுங்க கூறினார்.