Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.இஸ்ஸதீன் பிரியாவிடை.

சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி 30வருட  அரசசேவையிலிருந்து ஒய்வுபெறும் எம்.ஐ.இஸ்ஸதீனிற்கான பிரியாவிடை வைபவமும், கௌரவிப்பும் பிரதேச சபை வருமானப் பிரிவில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல் தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.இஸ்ஸதீனிற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1991இல் அரச முகாமைத்துவ உதவியாளராக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் முதல் நியமனம்பெற்று கடமையேற்றார். அதே அலுவலகத்தில் 23 வருடங்கள் கடமையாற்றியதுடன் 2000ம் ஆண்டு தொடக்கம் 13வருடங்கள் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரகவும் கடமையாற்றினார். 2014ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று சம்மாந்துறை பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக 7வருடங்கள் கடமையாற்றி 30 வருட அரச சேவையிலிருந்து தனது 60ஆவது வயதில் ஒய்வுபெற்றுள்ளார்.

இதவேளை சம்மாந்துறை பிரதேச சபையில் 6வருடங்களாக வெளிக்கள ஊழியராக கடமையாற்றிய வீ.ரீ.அலியாரின் சேவையினை கௌரவித்து சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe