இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு ஓரு ஆண்டிற்கும் மேலான நிலையில், தற்பொழுது இந்த தடையானது ஜூன் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தடையானது சரக்கு விமானங்களுக்கும், DGCA-வினால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.