சம்மாந்துறை அன்சார்.
மனைவியின் சன்கிளாசை உடைத்த கணவருக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியதில் உள்ள ராஸ் அல்-கைமா (Ras Al Khaimah) நீதிமன்றம் 5000 திர்ஹம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இது விடையம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
கணவன் மனைவிக்கு இடையேயான சண்டையின் காரணமாக கணவர் ஒருவர் தனது மனையை வீட்டிலிருந்து வெளியேறும் படி கூறி மனைவியின் பொருட்களையும் துாக்கி வீசியுள்ளார் இதனால் அவரது பொருட்கள் பல உடைந்து போயுள்ளது. கணவர் துாக்கி வீசிய பொருட்களில் மனைவியின் சென்டிமென்டான பொருள்களும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து தனது பொருட்களை துாக்கி வீசி உடைத்தமைக்காக தனக்கு 20 ஆயிரம் திர்ஹம் நஷ்டஈடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மனைவியின் பொருட்களை திரும்ப வாங்கிக் கொடுக்க கணவர் முன்வந்திருந்த போதும் அதனை ஏற்காத மனைவி அவரிடமிருந்து நஷ்டஈடு பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கினை தீர விசாரனை செய்த நீதிமன்றம் கணவர் பொருட்களை துாக்கி வீசியதில் மனைவியின் கண்ணாடி அதாவது சன்கிளாஸ் மாத்திரமே அதிக சேதமடைந்துள்ளமையினால் அதற்கு மாத்திரம் நஷ்டஈடாக 5000 திர்ஹம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.