Ads Area

பா.உ. முஷாரப் அவர்களினால் பொத்துவில் வைத்தியசாலைக்கு 75 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களினால் 75 இலட்சம் ரூபாய்கள்  பெறுமதியான  மருத்துவ உபகரணங்கள் இன்று (15-08-2021) பொத்துவில் ஆதார  வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. 

தீவிரமாக பரவி வரும் கோவிட்-19 காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள்  சுகாதார அமைச்சிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து, தருவிக்கப்பட்ட இம்மருத்துவ உபகரணங்கள் 

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. ILM. Rifaz அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் அப்துல் ரஹீம், பாராளுன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் யூ. எல் நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe