Rayyan Eisa என்ற சகோதரரின் முகநுால் பதிவிலிருந்து....
கடந்த January 28 ஆம் திகதி எனது தம்பியும் AR Abdul Hakeem (பெரியப்பாவின் மகன்) அவரது வகுப்பத்தோழர் மற்றும் அலுவலக நண்பர் Sajith உம் தமது வேலையை முடித்துக்கொண்டு கொழும்பில் இருந்து வேயன்கொடை ஊடாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். இவர்கள் Train இல் கொழும்பு நோக்கி அலுவலகம் சென்று வருவதை வழக்கமாக்ககொண்டிருந்தனர்.
வழமை போன்று 28 ஆம் திகதியும் வேயன்கொடையில் இருந்து Bike இல் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது வேயன்கொடை petrol shed க்கு அருகாமையில் பாதையில் பணப்பொதி (Wallet) ஒன்றைக் கண்டெடுக்கின்றனர். உடனே தமது bike இனை நிறுத்தி இருவரும் அதனை சற்று விரித்துப்பார்க்கும் போது இலட்சக்கணக்கான பணம் இருப்பதை அறிந்து கொள்கின்றனர். செய்வதறியாது அருகில் இருக்கும் Police station இல் ஒப்படைப்பதா அல்லது உரிமையாளரிடம் ஒப்படைப்பதா என சிந்தித்து விட்டு உரிமையாளரின் முகவரியை தேடுகின்றனர். முகவரி Nittambuwa பிரதேசம் என இணங்கன்டு கொள்கின்றனர். (இருக்கும் இடத்தில இருந்து 04 km).
வேறு ஏதும் சிந்திக்காமல் உடனடியாக இருவரும் முகவரியை ஒருவாறு தேடிச் செல்லும் போது wallet இனைத் தொலைத்த சகோதரர் உற்பட அவரது குடும்பத்தினர் பதற்றத்தோடு தொலைத்த பணப்பையைத தேட புறப்பட ஆயத்தமாக இருந்தனர்.
எனது தம்பியும் அவரது நண்பரும் உடனடியாக விடயத்தைச் சொல்ல அவர்களோ ஆனந்தத்தில் குதிக்கின்றனர். உடனடியாக பணப்பொதியை சரியாக ஒப்படைத்த திருப்தியில் இவர்கள் திரும்பி வரும் போது அவர்கள் ஏதாவது உங்களுக்கு செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிரோமே எனக்கூறும் போதே இவர்கள் அவற்றை மறுத்து விட்டு வீடு நோக்கி வருகின்றனர். அத்தோடு இந்த சம்பவம் நிறைவுக்கு வருகிறது.
இரண்டு கிழமைக்குப் பின்னர் அதாவது Feb 12 ஆம் திகதியளவில் எங்கள் ஊரில் 2 சகோதரர்கள் பெறுமதி வாய்ந்த பணப்பொதி ஒன்றைக் கண்டெடுத்து Nittambuwa பிரதேசத்தின் அந்நிய சகோதரர் ஒருவருக்கு வழங்கி இருப்பதாக தகவல் கசிய ஆரம்பிக்கிறது.
அந்த சகோதரர் (T.B Karunabandu - Loan Manager- HDFC Bank head office Colombo) எமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பள்ளிவாசல் ஊடாக இந்த 2 சகோதரர்களையும் தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.
பின்னர் ஒருவாறாக கிட்டத்தட்ட 06 மாதங்களின் பின்னர் இன்று (15/08/21) அந்த சகோதரர் நாட்டில் பிரபல தேர்களில் ஒருவரான (Malwaththa பனசலையின் நாயக்க ஹாமதுரு) வையும் அழைத்துக்கொண்டு எனது தம்பியின் வீடு தேடி வந்திருந்தனர்.
வந்தவர்கள் சிறிய ஒரு அன்பளிப்பு பொருள்களையும் வழங்க மறக்கவில்லை.
மனதாபிமானம் இன்னும் வாழ்கின்றது...!!