ஹரீஸ் ஸாலிஹ்
குவைத் அவசர உதவி மையம் (KEHS) கடந்த 4 வருடங்களாக குவைத்தில் வாழும் இலங்கையர்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்கி வருகிறது. கல்வி வழிகாட்டுதல், தொழில் வழிகாட்டுதல், ஆன்மீக வழிகாட்டுதல், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுதல், இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்தல், குவைத் -இலங்கை தூதரக விவகாரங்களுக்கு உதவுதல், குவைத்தில் இயங்கும் ஏனைய இலங்கை சங்கங்களுடன் இணைந்து செயற்படல் இவற்றுள் சில.
அதேபோல் , கடந்த கடந்த 4 வருடங்களாக குவைத் மத்திய இரத்த வங்கியுடன் இணைந்து பல இரத்த தான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது . KEHS இனது ஆறாவது இரத்த தான நிகழ்வு ஜூலை மாதம் 30 ஆம் திகதி குவைத் மத்திய இரத்த வங்கியில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக குவைத்துக்கான இலங்கை தூதுவர் His Excellency U. L. M Jauhar அவர்கள் கலந்து சிறப்பிப்பதுடன், சிறப்பு விருந்தினர்களாக எமது தூதுரக உயர் அதிகாரி திரு.. W. A. U. Poshitha Perera, தந்தை இவான் அந்தோணி பெரேரா, குவைத் மத்திய இரத்த வங்கியின் பொறுப்பாளர் மருத்துவர். திருமதி அஸ்மா, குவைத்தில் பணிபுரியும் இலங்கை மருத்துவர்கள் குழு, மற்றும் குவைத்தில் செயற்படும் பல இலங்கை மற்றும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய இந்த இரத்த தான நிகழ்வுக்கு இன, மத, சாதி பேதமின்றி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்தனர்.
எங்கள் அழைப்பை ஏற்று, இரத்த தானம் செய்யும் தொண்டு பணிகளுக்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(Madawla News)