உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அஞ்சல் அலுவலக பணியாளர்களுக்கு சம்மாந்துறை கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் முகக் கவசங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
கல்வி மேம்பாட்டு பேரவையின் பணிப்பாளர் மருதூர் ஏ.ஹசன் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை அஞ்சல் அலுவலக அதிகாரிகள் மற்றும் திரு. நெளஷாத், எஸ்.எல்.எம். நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.