Ads Area

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்து எரித்த கொடூரன் கைது.

சம்மாந்துறை அன்சார்.

சமீபத்தில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் உடலைத் தோண்டி எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து மீண்டும் அந்த உடலை எரித்த எகிப்து நாட்டவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊடகச் செய்திகளின் படி, எகிப்தில் அண்மையில் கொரோனா காரணமாக மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் கல்லறையைத் தோண்டி எடுத்து, சிறுமியின் உடலை பலாத்காரம் செய்து அதனை எரிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார், சிறுமி கொரோனாவினால் மரணமடைந்தார் என்பதை குற்றவாளி அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தோண்டி எடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தக் கல்லறையில் உள்ள மற்றுமொரு உடலோடு சேர்ந்து எரித்து மக்களின் கவனத்தை திரும்பி, கல்லறைக் காவலாளியின் மீது பழி சுமத்துவதற்காக அவர் திட்டம் தீட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe