தகவல் - சம்மாந்துறை அன்சார்.
மொரோக்கோ நாட்டில் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களால் அங்குள்ள 30 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து மொராக்கோ நீதித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காப்பகத்தில் வசிக்கும் பல குழந்தைகள், அங்கு பணிபுரிந்து வந்த இரண்டு தொழிலாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். இரு குற்றவாளிகளும் குழந்தைகள் மையத்தை நிர்வகிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மொரோக்கோ நாட்டை உலுக்கிய இக் குற்றத்தை விசாரிக்க மொரோக்கோ நீதித்துறை சுயாதீன விசாரனைகளை ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 6 முதல் 18 வயதுடைய சிறுமிகளாவர் எனவும் அவர்களிடமிருந்து சாட்சியங்கள் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மொராக்கோ நாட்டின் தண்டனைச் சட்டப்படி மைனர் ஒருவரை கற்பழித்தால் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் 30 சிறுமிகளை பலாக்காரம் செய்தவர்களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 2 வருடங்கள் அல்லது 5 வருடங்கள் என தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி மூலம் - https://gulfnews.com