தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் மக்கா நகர் பிரதேசத்தில் சவுதி அரேபிய தேசிய கொடியினை அவமதித்த நான்கு பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பழைய பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை ஒன்று சேர்த்து அதனை சவுதி தேசிய கொடியில் வைத்து சுற்றிக் கட்டி குப்பைத் தொட்டியில் வீசி தேசிய கொடியினை அவமதித்தமைக்காகவே குறித்த நான்கு பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபிய தேசிய கொடியினை வைத்து குப்பைகளை மூட்டையாக கட்டி வீசிச் சென்றதனை கண்ட ஒருவர் மூட்டையை அவிழ்த்து தேசிய கொடியினை வேறாக்கி, துாசு தட்டி, மடித்து அதற்கு முத்தமிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து குறித்த குப்பை மூட்டையை தேசியக் கொடியோடு துாக்கி வீசியவர்களை தேடி பொலிஸார் வலைவீசியதில் 4 பங்களாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், 3000 ரியால் அபராதமும் விதிக்கப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.