Ads Area

இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி முகாமையாளராக நியமனம் பெற்றர் ரீ.கே.றஹ்மத்துல்லா.

 (றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி முகாமையாளராக தனது கடமைகளை (21) பொறுப்பேற்றுக்  கொண்டார். அட்டாளைச்சேனைச் சேர்ந்த ரீ.கே.றஹ்மத்துல்லா.

பட்டப் படிப்பை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, சமுர்த்தி முகாமையாளர்களாக நியமனம் செய்யும் திட்டத்தின் கீழ் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.தஸ்லீம் தலைமையில் நடைபெற்ற கடமை பொறுப்பேற்றல் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நசீல் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர் மற்றும் உதவி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe