சம்மாந்துறை அன்சார்.
பள்ளிப் பேருந்தைத் திருடி விற்ற இரண்டு ஆசிய நாட்டவர்களுக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து, 184,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதித்துள்ளது.
நீண்ட நாட்களாக பயண்படுத்தப்படாமல் இருந்த ஸ்கூல் பஸ்களையே இவர்கள் திருடியுள்ளனர். திருட்டுச் சம்பவம் குறித்து பேருந்தின் உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் விசாரணைக் குழுவை அமைத்தனர்.
திருடப்பட்ட பஸ்கள் ஜிபிஎஸ் உதவியுடன் ஷார்ஜாவில் உள்ள கார் ஷோரூமில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அங்கு வேலை பார்த்து வந்தவராவார்.
இருவரும் பேருந்தை ஷோரூமுக்கு 34,000 திர்ஹம்களுக்கு விற்றுள்ளார்.