Ads Area

ஒரு தொகை பணம் மற்றும் போதைப் பொருளுடன் 18 வயது இளைஞன் கைது.

பாறுக் ஷிஹான்

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து வெள்ளிக்கிழமை (23) மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று -கல்முனை பிரதான வீதி, செயின் வீதி சந்தியில்   வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 09 பிரிவினைச் சேரந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேக நபர் வசமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 04 கிராம் 200 மில்லி கிராம், சந்தேக நபர் செலுத்தி வந்த ஹொன்டா ரக மோட்டார் சைக்கிள், ஒரு தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்  பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ் ரத்னாயக்க மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம்.டயஸ் தலைமையிலான உபபொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443), வீரகோன் (33354), பொலிஸ் கன்டபிள்களான பெரேரா (71664), அபேரட்ன (75812), நிமேஸ் (90699), சாரதி ஜெயரட்ன (19786) ஆகியோர் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe