பாறுக் ஷிஹான்
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்க்ர்திராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்திற்க்ர்திராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.