கிழக்கு மாகாணத்தினால் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாணத்திலேயே முதலிடத்தை வென்று சம்மாந்துறை மஜீட்புர பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் அன்சாத் பெறுமை சேர்த்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மஜீட்புர வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் இவர் ஆண்மீக, சமூக, விளையாட்டு போன்ற செயற்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால் நல் ஒழுக்கமுடைய, ஒரு சிறந்த மாணவன் என்ற நற் பெயருடன் அப்பாடசாலை சமூகம் இவரை இதுவரை காலமும் கௌரவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாலரின் வழிகாட்டலில் பிரதி கல்வி பணிப்பாலர் ஏ.எல்.ஏ மஜீட் தலைமையில் மஜீட்புர பாடசாலையில் இவரிற்கு மாலை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.