சம்மாந்துறையில் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் நம்பிக்கையாளர் சபை மேற்கொண்டுள்ள தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
நம்பிக்கையாளர் சபையின் அறிக்கை.
இவ்வருடம் க.பொ.த சாதாரன தரப் பரீட்சைக்குத் தோற்றி, உயர்தரம் கற்பதற்கு தயாராகவுள்ள மாணவர்களுக்குரிய வகுப்புக்களை தனியார் கல்வி நிலையங்கள் உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் கடந்த 2023.06.04ம் திகதி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் மஜ்லிஸ் அஷ்ஷுறா, ஜம்இய்யதுல் உலமா என்பவைகளின் நிருவாகிகளும், பிரதேச சபை, பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் நிலையம் என்பவைகளின் அதிகாரிகளும், தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் மற்றும் சாதாரன தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் போன்றோர்களும் கலந்து கொண்டனர்.
அக்கலந்துரையாடலில் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு எமதூரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் எதிர்வரும் 2023.07.06ம் திகதி வரை புதிதாக உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தயவுசெய்து மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானத்துக்கமைய தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் எதிர்வரும் 2023.07.07ம் திகதி முதல் தங்களது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும், இதனை உயர்தரம் கற்கவுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.