ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அனைத்து அத்திய அவசிய பொருட்களின் விலையும் தொட முடியாத உச்சத்திற்கு உயர்ந்து கொண்டு செல்கிறது.
இது எமக்கு மிகவும் சவாலான காலப்பகுதியாக காணப்படுகிறது. அதே சமயம் எமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களும் இப்பொருளாதார நெருக்கடியால் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் எமது வியாபார நிலையங்களில் இருக்கின்ற வியாபார பொருட்களுக்கு அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான மரக்கறி மற்றும் பலசரக்குப் பொருட்களுக்கு எமது வாடிக்கையாளர்கள் கண்களுக்கு புலப்படும் வகையில் அவற்றின் விலைகளை காட்சிப்படுத்துங்கள். காட்சிப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களின் நிலைப்பாடாக எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் பல சங்கடங்களையும் சலனங்களையும் எதிர்கொள்கின்றனர்.
ஆகவே இதனை கருத்தில் கொண்டு தங்களது வியாபார நிலையங்களில் காணப்படுகின்ற வியாபார பொருட்களுக்கு உரிய விலைகளை அவற்றில் காட்சிப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டப்படுகிறீர்கள்.
சம்மாந்துறை வர்த்தக மற்றும் தொழில்கள் சம்மேளனம்.
Sammanthurai Chamber Of Commerce And Industries