Ads Area

தேங்கிக்கிடக்கும் கடற்கரையோர பிளாஸ்டிக் கழிவுகள் : அகற்றக் கோரிக்கை.



பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாகபிளாஸ்டிக் மற்றும் இறந்த  தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதைக்காண முடிந்தது.

 

குறிப்பாக அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட நிலையில், இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரையொதுங்கி  நிறைந்து காணப்படுகின்றன.


அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவுகள் தென்பட்டுள்ளன.


இவ்வாறான கழிவுப்பரவலானது கரையோர மீனவர்களது மீன்பிடித்தொழிலுக்கு பெரும் சிரமங்களைக்கொடுப்பதுடன், வலைகளிலும் சிக்கி வருகின்றன.


எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத்தலையிட வேண்டுமென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe