காவத்தமுனை ஹெல்பீஜ் வீட்டுத்திட்டத்திற்குச் செல்லும் ஓட்டமாவடி கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு முன்னாலிருக்கும் வீதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மின் கம்பமொன்று வீதிக்கு குறுக்கே வீழ்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும் உயிரச்சுறுத்தலாகவும் பல மாதங்களாகக் காணப்படுகின்றது.
இது தொடர்பாக பல தடவைகள் இலங்கை மின்சார சபையின் வாழைச்சேனை கிளையினைத்தொடர்பு கொண்டு தெரிவித்த போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும் உயிர்ச்சேதங்களுக்கும் இலங்கை மின்சார சபை பொறுப்புக்கூற வேண்டி வருமென்பதையும் கவனத்திற்கொண்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முகம்மது பதுர் (காவத்தமுனை)