Ads Area

சவுதி அரேபியாவில் வருடத்திற்கு ஒரு மில்லியன் டொன் (ton) காய்கறிகள் waste - வீண்விரயமாவதாக தகவல்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.


சவுதி அரேபியாவில் வருடத்திற்கு ஒரு மில்லியன் டொன் (ton) காய்கறிகள் waste - வீண்விரயமாவதாக சவுதி அரேபியாவின், சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.  குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காய்கறிக் கழிவுப் பிரச்சனையைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் வீண்விரயங்களை தடுக்க வேண்டும் எனவும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இது தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது சவுதி அரேபியாவின் விவசாயத் துறைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது," என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில் 234,000 டன் தக்காளி, 201,000 டன் உருளைக்கிழங்கு, 110,000 டன் வெங்காயம், 82,000 டன் வெள்ளரிகாய், 335,000 சுரைக்காய் மற்றும் 38,000 டன் ஏனைய காய்கறிகள் கழிவுகளில் சேர்க்கப்பட்டு வீண்விரயம் செய்யப்படுவதாக அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.


நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றை செயற்படுத்த அமைச்சகம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் வீண்விரயம் செய்வதிலிருந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe