தகவல்: முபாறக் அஸ்லம். எப்.எம்.சிபான்.
1.சம்மாந்துறை அமீர் அலி சிறுவர் பூங்காவிற்கு உள் நுழையும் இரண்டாம் நுழைவாயில் பல மாதக்கணக்கில் மூடி வைத்திருப்பது ஏன் ?
2.நுழைவாயில் சேதம் அடைந்திருந்தால் அதனை கவனத்தில் கொண்டு சரி செய்யாமல் இருப்பது சம்மாந்துறை பிரதேச சபையின் தவறா அல்லது கவன குறைவா பொதுமக்கள் கேள்வி?
3.சம்மாந்துறையில் பிரதேசத்தில் உள்ள இந்த சிறுவர் விளையாட்டு பூங்கா இரவு 8.00 மணி உடன் மூடப்படுகிறது! இதனால் கவலையடையும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளி பிரதேச மக்கள் பலர் இங்கே வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்!
இந்த சிறுவர் பூங்கா மூடப்படுகின்ற நேரத்தை அதிகப்படுத்தி தருமாறு பொதுமக்கள் பிரதேச சபையிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்! பொதுமக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுமா சம்மாந்துறை பிரதேச சபை?
சிறுவர் பூங்காவிற்கு உள் நுழையும் நேர அட்டவணையை காட்சி வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளி.சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் திரளான மக்கள் இங்கே வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.