Ads Area

இளம் வயதில் தேசிய ஊடகத்தில் காலூண்றியுள்ள முபாறக் அஸ்லம் - சம்மாந்துறை மீடியா போரம் வாழ்த்து..!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டினால் இளம் ஊடகவியலாளர்களின் திறன் விருத்திக்கு வித்திடும் வாய்ப்பினூடாக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் ஒரு ஊடகவியலாளர் எனும் வரிசையில் சம்மாந்துறை பிராந்திய செய்தி நிருபராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி நிருபராக சம்மாந்துறையைச் சேர்ந்த முபாறக் அஸ்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளமையையிட்டு சம்மாந்துறை மீடியா போரம் மனம் நிறைவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.


தனது 21 வயதில் தேசிய ஊடகமான ரூபவாஹினியில் பிராந்திய செய்தி நிருபராக தெரிவாகியுள்ளமை பாராட்டத்தக்கதும், ஊக்கமளிக்கப்பட வேண்டியதுமான விடயமாகும். சம்மாந்துறை அல் - அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் தாறுஸ்ஸலாம் வித்தியாலயங்களில் கல்வி கற்ற இவர் ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவாவோடு தொடராக பல்வேறு சமூக ஊடகங்களிலும் நிருபராக கடமையாற்றி வருகின்றார்.


இவர் சித்திக் - ஜனூபா ஆகியோரின் புதல்வர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது வெற்றியின் முதல் அடைவாக ஊடகவியலாளர் எனும் அந்தஸ்த்தை எட்டியுள்ள முபாறக் அஸ்லம் இன்னும் பல அடைவுகளைப் பெறவும் சம்மாந்துறை மீடியா போரம் பாராட்டி, வாழ்த்துகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe