Ads Area

லெபனானில் சட்டவிரோதமாக பணிபுரியும் இலங்கையர்களுக்கு 2025 ஜனவரி 8 வரை பொது மன்னிப்பு.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வேலைக்காக லெபனானுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு 2025 ஜனவரி 8 வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் நிலையை சரிசெய்யது கொள்ள இந்த மன்னிப்புக் காலம் வழி செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


லெபனானில் உள்ள இலங்கையர்கள் குறித்த விடையத் தொடர்பில் கவனத்தில் எடுத்து அங்குள்ள இலங்கைத் துாதரகத்தினை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.


செய்தி மூலம் - https://www.themorning.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe